எளிய தமிழில் அரிய கருத்துகளை உலகத் தமிழர்களின் உள்ளங்களில் விதைத்தவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
அந்தப் பாட்டுக் கோட்டையின் வாழ்க்கைப் பதிவுகளையும், படைப்புகளையும் கிடைத்த வரை தொகுத்து வழங்கியுள்ளோம். இன்னும் தகவல்கள் இருப்பின் எங்களுக்கு அளிக்கலாம். அவை இந்த இணைய தளத்தில் இடம்பெறும். இத்தளத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்… திருத்தி விடுகிறோம்.
பொதுநலத்தையே குறிக்கோளாகக் கொண்டு பாடிப்பறந்த மக்கள் கவிஞரை இந்தத் தலைமுறையும் இனி வரும் தலைமுறைகளும் அறிந்துகொள்ள எங்களின் சிறுபணியே இந்த இணையதளம்.
இந்த இணைய தளம் உருவாக ஒத்துழைத்த எல்லா உள்ளங்களுக்கும் எம் நன்றி.
